ரியாத்: சவுதி அரேபிய எஃப்1 கார் பந்தயத்தை முதல் நிலையில் இருந்து தொடங்குவது யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியின்போது நடந்த விபத்தில் இருந்து மைக்கல் ஷூமாக்கரின் மகன் மைக் ஷூமாக்கர், 23, உயிர்தப்பினார்.
அவருக்கு இது இரண்டாவது கார் பந்தய பருவமாகும். மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவர் தமது காரின் கட்டுப்பாட்டை இழந்தார். அப்போது ஜெடா சாலையில் உள்ள தடுப்பு ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டது. சேதமடைந்த காரில் இருந்து மீட்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

