இந்தியாவிடம் கூடுதல் கடன் கேட்கும் இலங்கை

இந்தியாவிடம் கூடுதல் கடன் கேட்கும் இலங்கை

1 mins read
c0682569-204a-4406-b7e7-ed55fbc7e41f
சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயுத் தோம்புக்காக இலங்கை மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: கடந்த பல ஆண்­டு­கள் இல்­லாத அள­வில் மிக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொள்­கிறது.

செய்­வ­த­றி­யாது தவித்து வரும் இலங்கை அர­சாங்­கம் அண்டை நாடான இந்­தி­யா­வி­ட­மி­ருந்து கூடு­த­லாக $1.36 பில்­லி­யன் கடன் கேட்­டி­ருக்­கிறது. இலங்­கைக்கு இந்­தியா ஏற்­கெ­னவே 1 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் ($1.36 பில்­லி­யன்) கடன் கொடுத்து ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­யுள்­ளது. இலங்கை அர­சாங்­கத்­து­டன் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் பேச்­சு­வார்த்­தை­க­ளைத் துவங்­கி­யுள்ள வேளை­யில் இந்­தி­யா­வி­டம் அந்­நாடு நிதி உதவி நாடி­உள்­ளது. பொரு­ளியல் நெருக்­கடி கார­ண­மாக உணவு, எரி­வாயு போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை இலங்­கை­யால் இறக்­கு­மதி செய்ய முடி­ய­வில்லை.

அரிசி, கோதுமை, பருப்பு வகை­கள், சீனி, மருந்­து­கள் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை இலங்கை இறக்­கு­மதி செய்ய ஏது­வாக இந்­தியா அந்­நாட்­டுக்­குக் கடன் வழங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் கூடு­தல் கடன் வழங்கு ­வது குறித்த விவ­ரங்­களை இரு­

த­ரப்­பி­ன­ரும் வெளி­யி­ட­வில்லை. கலந்­து­ரை­யா­ட­லின்­போது பேசப்­பட்­டவை ரக­சி­யம் காக்­கப்­ப­டு­கின்­றன. பொரு­ளி­யல் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் இலங்கை மக்­கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இலங்கை அதி­பர் கோத்­த­பய ராஜ­பக்­சே­யும் அவ­ரது அண்­ண­னும் நாட்­டின் பிர­த­ம­ரு­மான மகிந்த ராஜ­பக்­சே­யும் கார­ணம் என்று இலங்கை மக்­கள் குறை­கூ­று­கின்­ற­னர்.

இவ்­வி­ரு­வ­ரும் பதவி விலக வேண்­டும் எனக் கோரி அண்­மைய சில நாள்­க­ளாக இலங்­கை­யில் பல ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­

பட்­டுள்­ளன.