லியேவ்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் மாண்ட தங்கள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை அடக்கம் செய்ய உக்ரேனியர்கள் பலர் லியேவ் நகரில் நேற்று முன்தினம் ஒன்றுகூடினர்.
போர் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் தாக்குதல்களால்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருந்தபோதிலும் மாண்ட ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில் உக்ரேனியர்கள் கலந்துகொண்டனர். உயிரிழந்த வீரர்களின் உற்றார் உறவினர் கண்ணீர் மல்க வீரவணக்கம் செலுத்தினர். அதேபோல போரில் வீர மரணம் அடைந்த தனது வீரர் களையும் ரஷ்யா அடக்கம் செய்தது.

