மாஸ்கோ: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இவ்வாரம் இந்தியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக இந்தியாவின் தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து, ரஷ்ய அமைச்சர் இந்தியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.
ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் விற்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடு
களிடையிலான பணப் பரிவர்த்தனை முறை பற்றியும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உக்ரேன் மீது தாக்குதல்
நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிராக இந்தியாவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை வலி
யுறுத்துகின்றன. ஆனால்
இந்தியா நடுநிலையுடன் நடந்துகொள்கிறது.
நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை.
இதற்கிடையே, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளும் மற்ற சில நாடுகளும் விதித்துள்ள தடை
களால் ரஷ்ய வர்த்தகத்துக்கு தேவையற்ற தீங்குகள் இழைக்கப்படுவதாக சீனா குறைகூறிஉள்ளது.
சீனா தனது உரிமையை
விட்டுக்கொடுக்காது என்றும் தனக்குப் பலன் தரும் நடவடிக்கைகள் தொடரும் என்றும்
உறுதியாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது முக்கிய அரசதந்திரப் பங்காளி என்றும் அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளால் வழக்கமான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனா அதிருப்தி தெரிவித்தது.

