யங்கூன்: வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியின் பணியாளர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளார்.
இதனால் வழக்கு விசாரணைக்காக 76 வயது சூச்சியால் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை. திருவாட்டி சூச்சிக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை என்றபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

