பிள்ளைகளின் மத மாற்றத்தை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடிய மலேசிய மாது

பிள்ளைகளின் மத மாற்றத்தை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடிய மலேசிய மாது

1 mins read
7ec54851-69f4-40a7-84b7-ead417d5001f
-

கோலா­லம்­பூர்: தம் மூன்று பிள்­ளை­களும் தமது சம்­ம­த­மில்­லா­மல் இஸ்­லாம் மதத்­திற்கு மாறி­யதை ரத்து செய்­யக் கோரி லோ சியூ ஹாங் (படம்) எனும் இந்து சம­யத்­தைச் சார்ந்த பெண் நீதி­மன்­றத்தை நாடி உள்­ளார்.

இது­தொ­டர்­பாக அவர் தாக்­கல் செய்­தி­ருக்­கும் சீராய்வு மனு, மே மாதம் 17ஆம் தேதி விசா­ர­ணைக்கு வரும் என்று கோலா­லம்­பூர் உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

அந்த சீராய்வு மனு­வில், பெர்­லிஸ் மாநில மத­மாற்ற பதி­வா­ளர், பெர்­லிஸ் இஸ்­லா­மிய-மலாய் சடங்கு மன்­றம், பெர்­லிஸ் மாநில சம­யத் தலை­வர் டாக்­டர் முக­மது அஸ்ரி சைனுல் அபி­தின், பெர்­லிஸ் மாநில அர­சாங்­கம் ஆகிய 4 தரப்­பு­களை லோ, பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்­டுள்­ளார்.

கண­வ­ரைப் பிரிந்து வாழும் லோ, தனது 3 பிள்­ளை­களும் இந்­துக்­கள் என­வும் தமது அனு­மதி­யின்றி பிள்­ளை­க­ளின் மதத்தை மாற்­று­வ­தற்கு தனது முன்­னாள் கண­வர் நாகேஸ்­வ­ர­னுக்கு உரி­மை­யில்லை என­வும் அறி­விக்க வேண்­டும் என்­றும் அதில் குறிப்­பிட்­டுள்­ளார்.

மதம் மாறிய இரட்டை பெண் பிள்­ளை­க­ளுக்கு 14 வயது என்­றும் ஆண் பிள்­ளைக்கு 10 வயது என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. படம்: தி ஸ்டார்