20 பேருக்கு அபராதம்; ஜான்சன் பதவி விலக மீண்டும் அழுத்தம்

20 பேருக்கு அபராதம்; ஜான்சன் பதவி விலக மீண்டும் அழுத்தம்

2 mins read
2f13f3b0-81a2-4bfa-a858-2b7e946bb8c2
-

லண்­டன்: லண்­ட­னில் முடக்­க­நிலை நடப்­பில் இருந்­த­போது, டவு­னிங் ஸ்தி­ரீட்­டில், பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னின் இல்­லம், அலு­வ­ல­கங்­களில் நடந்த விருந்து நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட 20 பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­வ­தாக பிரிட்­டி‌ஷ் போலிஸ் தெரி­வித்­துள்­ளது.

கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களை மீறி அவ்­வி­டங்­களில் நடத்­தப்­பட்ட 12 நிகழ்ச்­சி­கள் குறித்து விசா­ரணை நடை­பெற்று வருகி

றது.

அவற்­றில் அர­சாங்க அதி­கா­ரி­கள் சில­ரும், ஒரு சில நிகழ்ச்­சி­களில் பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னும் கலந்­து­கொண்­ட­தாக முந்­திய விசா­ரணை தெரி­வித்­தது.

அப்­போதே, பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் பதவி விலக வேண்­டும் என்று அவ­ரது சொந்­தக் கட்­சி­யில் இருந்­தும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. மக்­க­ளுக்­கும் அவர் மீதி­ருந்த நம்­பிக்கை சரிந்­தது.

இந்த விசாரணை தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பிறகு, முதல்­கட்­ட­மாக 20 பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­வ­தாக நேற்று காவல்­துறை தெரி­வித்­தது.

ஆனால் தண்­ட­னையை எதிர்­கொள்­ளும் நபர்­க­ளின் பெய­ரையோ அல்­லது அவர்­கள் எந்த நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­டார்­கள் என்­ப­தையோ காவல்­துறை தெரி­விக்­க­வில்லை.

விசா­ரணை தொடர்ந்து நடை­பெற்று வரு­வ­தா­வும் மேலும் பல­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் அது கூறி­யது.

15க்கும் மேற்­பட்­ட­வர்­கள் ஒன்­று­கூ­டிய நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்­கான அப­ரா­தம் 800 பவுண்­டா­கும் (1,420 வெள்ளி).

இந்­நி­லை­யில், பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் பதவி வில­க­வேண்­டும் என்ற கோரிக்கை மீண்­டும் எழுந்து உள்­ளது.

"பிர­த­மர் அலு­வ­லு­கம் விதி­முறையை மீறி­யது உறுதிப்படுத்தப் பட்­டுள்­ளது," என்­றார் எதிர்க்­கட்­சி­யின் துணைத் தலை­வர் ஏஞ்­சலா ரெய்­னர்.

விதி­மு­றையை மீறி­யது உறுதி செய்­யப்­பட்­டால் ஜான்­சன் பதவி விலக வேண்­டும் என்று ஏற்­கெ­னவே அவர் கூறி­யி­ருந்­தார்.