சிங்கப்பூர்: மூன்று நாடுகள் பங்கேற்கும் அனைத்துலக நட்புமுறை காற்பந்துப் போட்டிகள் தொடரில் நேற்றிரவு சிங்கப்பூர் குழு, பிலிப்பீன்ஸ் குழுவைச் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்
றது.
ஏற்கெனவே மலேசியாவிடம் தோல்வி கண்ட பிலிப்பீன்ஸ் குழு எப்படியாவது இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது.
சிங்கப்பூரும் அதன் இரண் டாவது வெற்றியைப் பதிவு செய்ய கடுமையாக போராடியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் சிங்கப்பூரின் சஃபுவான் பஹாருடின் முதல் கோலைப் போட்டார்.
முற்பாதி ஆட்டம் முடிவுறும் தறுவாயில் பிலிப்பீன்சின் ஆட்டக்காரர் ஒருவர் முரட்டுத்தனமாக விளையாடியதால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, திடலைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
பிற்பாதி ஆட்டத்தில் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடினாலும் சமநிலை கோல் போடும் விறுவிறுப்புடன் விளையாடியது பிலிப்பீன்ஸ். சிங்கப்பூரும் பிலிப்பீன்சின் கோல் முனையை தொடர்ந்து முற்றுகையிட்டு, கோல் போட முயன்றது.
இறுதியில், ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் சிங்கப்பூரின் ஷவால் அன்வார் இரண்டாவது கோலைப் போட்டு, சிங்கப்பூரின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர் 2-1 என்ற கோல்கணக்கில் மலேசியாவை வெற்றி கண்டது.

