ஹாங்காங்: ஹாங்காங்கில் கடுமையான கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால், வெளிநாட்டுத் திறனாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
இதனால், அங்கு திறனாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதை முதல்முறையாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனாலும் ஹாங்காங்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் சொன்னார்.
ஹாங்காங்கின் கட்டுப்பாடுகள் தனிநபர்களையும் நிறுவனங்களையும் பாதித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
"ஆனால் கொள்ளைநோய் முடிவுக்கு வந்த பிறகு, ஹாங்காங்கிற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்.
"திறனாளர்களுக்கும் குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கும் ஹாங்காங் இன்னமும் பிடித்தமானதாகவே உள்ளது," என்றார்.
இவர்கள் இங்கும் அங்கும் போய் கொண்டிருப்பவர்கள், எனவே, போனவர்கள் மீண்டும் ஹாங்காங்கிற்குத் திரும்பி வருவார்கள் என்றும் அவர் சொன்
னார்.

