வாக்கெடுப்பிற்கு முன்பே இம்ரான் கானின் ஆட்சி கவிழும் அபாயம்

வாக்கெடுப்பிற்கு முன்பே இம்ரான் கானின் ஆட்சி கவிழும் அபாயம்

1 mins read
863772e3-4972-4cf9-9b4e-454eb422f75e
-

கராச்சி: பாகிஸ்­தா­னில் பிர­த­மர் இம்­ரான் கான் அரசு மீது எதிர்க்­கட்­சி­கள் நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்தை தாக்­கல் செய்­துள்­ளன.

இந்­நி­லை­யில், ஆளும் கூட்­டணி கட்­சி­களில் ஒன்­றான முத்­தா­ஹிதா குவாமி மூவ்­மென்ட் கட்சி இம்­ரான் கான் அர­சுக்கு அளித்த வந்த ஆத­ரவை நேற்று விலக்­கிக்கொண்­டது. அது­மட்­டு­மல்­லா­மல் எதிர்க்­கட்­சி­யு­டன் கைகோத்து இம்­ரா­னுக்கு பேர­திர்ச்­சி­யைக் கொடுத்­துள்­ளது.

இதை­ய­டுத்து, நம்­பிக்­கை­யில்லா தீா்மானம் மீதான வாக்­கெ­டுப்பு நடை­பெ­று­வ­தற்கு முன்­னரே இம்­ரான் கான் அரசு கவி­ழும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இம்­ரான் கான் மீதான நம்­பிக்­கை­யில்லா தீா்மானம் மீது வரும் 3ஆம் தேதி வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது.

இது­கு­றித்த விவா­தம் இன்று தொடங்­கும் என்று அந்­நாட்டு உள்­துறை அமைச்சா் ஷேக் ரஷீத் சொன்­னார்.

விலை­வாசி உயர்வு உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு இம்­ரான் கானின் மோச­மான ஆட்­சி­மு­றையே கார­ணம் என எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சாட்டி வரு­கின்றன.