இலங்கை பொருளாதார நெருக்கடி: தெரு விளக்குகள் அணைப்பு

இலங்கையில் மின்சாரம் சேமிக்க தெரு விளக்குகள் அணைக்கப்படுதம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டை இறுக்கிவரும் பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 13 மணிநேரம் வரை தடை நீடிக்கிறது.

பேருந்துகள், வணிக வாகனங்கள் பயன்படுத்தும் டீசல் முற்றாக விற்பனையில் இல்லை. பெட்ரோல் குறைவான அளவிலே விற்கப்படுவதால், பலரும் தங்கள் வாகனங்களைச் சாலையிலே விட்டுவிட்டனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதற்குக்கூட முடியாமல் இலங்கை மீனவர்கள் தவிக்கின்றனர். கடலில் ஏராளமான மீன்கள் குவிந்திருந்தாலும், அவற்றை கடலுக்குச் சென்றுபிடிக்க வழியில்லை. படகுகைளைச் செலுத்த டீசல், மண்ணெண்ணெய் இரண்டுமே கிடையாது. இதனால் மீனவக் குடும்பங்கள் பசியால் வாடுகின்றனர்.

இலங்­கை­யின் அந்­நி­யச் செலாவணிக் கையி­ருப்பு, வர­லாற்­றில் இல்­லாத அள­வுக்­குக் குறைந்து விட்­ட­தால் இறக்­கு­ம­திக்­குப் பணம் செலுத்த அந்த நாடு திண்­டாடி வரு­கிறது. அதனால், உதவி கேட்டு பல நாடு­க­ளை­யும் இலங்கை அணுகி வரு­கிறது.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபின் இலங்கை சந்திக்கும் ஆக மோசமான பொருளாதார நெருக்கடி இது எனக் கூறப்படுகிறது.




 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!