மலேசிய விடுதிகளில் ஆள் பற்றாக்குறை

மலேசிய விடுதிகளில் ஆள் பற்றாக்குறை

2 mins read
cd6f5c9e-7635-449b-91d1-0dce04c93dda
-

கோலா­லம்­பூர்: மலே­சியா இன்று முதல் வெளி­நாட்­டுச் சுற்­றுப் பய­ணி­க­ளுக்­குத் தனது எல்­லை­யைத் திறந்­து­வி­டு­கிறது. அத­னை­ய­டுத்து அங்­குள்ள விடுதி உள்­ளிட்ட சுற்­று­லாத்­துறை சார்ந்த வர்த்­த­கங்­கள் ஆள் பற்­றாக்­கு­றை­யா­மல் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இன்று முதல் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட மாட்­டார்­கள் என்று மலே­சியா அறி­வித்­துள்­ளது. அதே­போல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மலே­சி­யர்­களும் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்­று­வர அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

மலே­சி­யா­வின் இந்த அறி­விப்­பைத் தொடர்ந்து அங்­குள்ள விடு­தி­கள், சுற்­று­லாத் தலங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு சுற்­று­லாப் பய­ணி­க­ளின் வரத்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், சுற்­று­லாத்­துறை சார்ந்த பல வர்த்­த­கங்­கள் ஆள் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்கி வரு­கின்­றன.

உல­கையே உலுக்­கிய கொவிட்-19 தொற்­றால் மலே­சி­யா­வில் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக முடக்­க­நிலை, பய­ணத் தடை போன்ற கட்­டுப்­பா­டு­க­ளால் மக்­கள் நாட்­டுக்­குள்ளே முடங்­கிக் கிடக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து சுற்­று­லாத்­துறை படு­மோ­ச­மாக பாதிக்­கப்­பட்­டன.

ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள் எவ்­வித வரு­வா­யு­மின்றி ஊழி­யர்­க­ளுக்­குச் சம்­ப­ளம் கொடுக்­க­மு­டி­யாத நிலை­யில் இழுத்து மூடப்­பட்­டன.

பல நிறு­வ­னங்­கள் ஆட்­கு­றைப்பு செய்­தன. ஆனால், இப்­போது அங்­குள்ள சுற்­று­லாத்­துறை நிறு­வ­னங்­கள் ஆள்­சேர்க்­கும் பணி­களை முடுக்­கி­விட்­டுள்­ளன.

இந்த மாதக் கடை­சிக்­குள், வட்­டார மற்­றும் அனைத்­து­ல­கச் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரிக்­கும் என்று மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள 'கிராண்ட் ஹயட்' விடு­தி­யின் பொது­நிர்­வாகி ஆலி­வர் லெனாய்ர் ஒரு பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.

வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­கள் மட்­டும் அல்­லாது உள்­ளூச் சுற்­று­லாப் பய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில் விடு­தி­கள் அதற்­கேற்ப பணி­யா­ளர்­களை அதி­கப்­ப­டுத்­தும் பணி­யில் தீவி­ரம் காட்­டத் தொடங்­கி­யுள்­ளன. அனைத்­து­ல­கப் பய­ணி­களை மலே­சி­யா­வுக்கு ஈர்ப்­ப­தோடு உள்­ளூர்ச் சுற்­று­லாத்­து­றை­யை­யும் அர­சாங்­கம் சந்­தைப்­ப­டுத்த வேண்­டும் என்று சுற்­று­லாத்­துறை நிறு­வ­னங்­கள் விரும்­பு­கின்­ற­ன.

ஜோகூர் பாரு­வில் உள்ள 'த நியூ­யார்க் ஹோட்­ட­ல்' விடுதியும் குறை­வான ஊழி­யர்­க­ளைக் கொண்டு இயங்கி வரு­கிறது. இப்­போது இங்கு வரு­கை­யா­ளர்­க­ளின் விகி­தம் 48 விழுக்­கா­டு­தான்.

குறைந்த எண்­ணிக்­கை­யி­லான ஊழி­யர்­க­ளைக் கொண்டு விடு­தியை தடங்­க­லின்றி இயக்க முடி­கிறது. இனி வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளின் வரத்து அதி­க­ரிக்­கும். எனவே, மேலும் அதிக ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கும் முயற்சி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ள­தாக அந்த விடு­தி­யின் பொது மேலா­ளர் குமாரி டான் அய் லீ, ஒரு பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார். இருப்பினும் தற்போது பணியில் இருக்கும் பணியாளர்கள் முதல் தலைமைப் பணியாளர்கள் வரை அனைவரும் பலதரப்பட்ட பணிகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று அவர் கூறினார். அதே­போல் ஜோகூர் பாரு­வில் உள்ள கடைத்­தொ­கு­தி­களில் உள்ள கடை­கள், உண­வகங்கள் ஆகி­ய­வை­யும் ஆள்­சேர்க்­கும் பணி­யில் முனைப்­பு­டன் ஈடு­பட்­டுள்­ளன.