மானிய விலை பெட்ரோல் குறித்து ஏழு புகார்கள்

மானிய விலை பெட்ரோல் குறித்து ஏழு புகார்கள்

1 mins read
626f2db7-a168-41c2-9b50-761cad2df34d
-

புத்­ர­ஜெயா: சிங்­கப்­பூர், தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளு­டன் மலே­சிய நில வழி எல்­லை­யைத் திறந்த ஐந்து நாள்­களில், வெளி­நாட்டு வாக­னங்­க­ளுக்கு மானிய விலை பெட்­ரோல் நிரப்­பப்­பட்­ட­தாக மலே­சிய அர­சாங்­கத்­தில் ஏழு புகார்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

உள்­நாட்டு வர்த்­த­கம், பய­னீட்­டா­ளர் விவ­கார அமைச்­ச­கத்­தின் அம­லாக்க இயக்­கு­நர் அஸ்­மான் ஆடம், "இந்த அனைத்து வழக்­கு­களும் ஜோகூ­ரில் பதி­வா­கி­யுள்­ளன. இது, சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட வாக­னங்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை என்­ப­தைக் காட்­டு­கிறது," என்­றார்.

இது­தொ­டர்­பாக, ஜோகூ­ரில் உள்ள இரண்டு பெட்­ரோல் நிலை­யங்­களில் விசா­ரணை நடத்­தப்

­ப­டு­வ­தாக அவர் சொன்­னார் என பெர்­னாமா செய்தி குறிப்­பிட்­டி­ருந்­தது.

மேலும் இது­கு­றித்து இறுதி கட்ட விசா­ரணை நடந்­து­வ­ரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

மார்ச் 31 முதல் ஏப்­ரல் 6ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில், RON97 பெட்­ரோல் 3.91 ரிங்­கிட் டாக­வும் RON95 எனும் மானிய விலை பெட்­ரோல் 2.05 ரிங்­கிட்­டாக (0.66 வெள்ளி) உள்­ளது.