கேன்பரா: ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதியன்று நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று அறிவித்தார்.
தேர்தல் பிரசாரங்களின்போது வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், பிரதான கட்சி
களின் ஆற்றல் ஆகியவை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு மோரிசனின் கன்சர்வேட்டிவ் கூட்டணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து
வருகிறது. ஆனால் தற்போது அக்கூட்டணிக்கு இருக்கும் ஆதரவைவிட தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவு இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்
கணிப்பிலும் திரு மோரிசனுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் திரு மோரிசன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
"நிலையற்றதன்மை அதிகமாக உள்ளது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்தத் தேர்தலும் தேர்தல் பிரசாரமும் மிகவும் முக்கியம்.
எங்கள் கூட்டணி அமைத்திருக்கும் அரசாங்கத்திடம் சில குறைபாடுகள் உள்ளன. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்கள் நிலைப்பாடு குறித்து ஆஸ்திரேலியர்களுக்குத் தெரியும். இந்நாள் நாங்கள் செய்துள்ள பணிகள் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டுள்ள திட்டங்கள் ஆகியவை பற்றி வெளிப்
படையாகக் கூறியுள்ளோம்," என்று தலைநகர் கேன்பராவில் செய்தியாளர்களிடம் திரு மோரிசன் தெரிவித்தார்.

