பெட்டாலிங் ஜெயா: சாபாவில் உள்ள தாவாவ் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக கோலாலம்பூருக்குத் திரும்பியதாக மலேசிய சிவில் போக்குவரத்து விமான ஆணையம் தெரிவித்தது.
விமானத்தின் வேகம், உயரம் ஆகியவற்றை தெரிவிக்கும் கருவி பழுதடைந்திருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஆணையத்தின் தலைமை நிர்வாகி கெப்டன் செஸ்டர் வூ கூறினார்.
இத்தகைய கோளாறு ஏற்
பட்டிருப்பது தெரியவந்ததும் விமானி உடனடியாகச் சரியான முடிவை எடுத்ததாக அவர் கூறினார். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரும்பியதாக அவர் கூறினார்.

