கராச்சி: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு செய்யப்பட்டார்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியதால், எதிர்க்கட்சிகளே இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரதமராகிஉள்ளார் ஷெபாஸ் ஷரிஃப்.
70 வயதாகும் ஷெபாஸ், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப்பின் தம்பியாவார்.
ஷெபாஸ் மூன்று முறை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்தவர்.
2017ஆம் ஆண்டு தேசிய அரசியலில் நுழைந்த ஷெபாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானார்.
பாகிஸ்தானில் சென்ற வாரம் தொடங்கிய அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவை துணைத் தலைவா் காசிம் சுரி நிராகரித்தார்.
ஆனால், அது செல்லாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், இம்ரான் கான் தோற்றுவிட்டார்.

