மியன்மார் ராணுவம் தாக்குதல்

1 mins read
480a65b3-82c8-4661-adbd-687edf426694
-

கேரேன்: ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்களைக் குறிவைத்து மியன்மாரின் கேரேன் மாநிலத்தில் ராணுவப் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ஊடகச் செய்திகள் கூறின.

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள லே கே காவ் நகரத்தை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கிளர்ச்சிக் குழுவின் படோ சா தவ் நீ சொன்னார். தங்­க­ளது படை­யி­னர் 45 ராணுவ வீரர்­க­ளைக் கொன்­று­விட்­ட­தா­க­வும் தங்­கள் தரப்­பில் இரு­வர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அவர் சொன்­னார்.

மியன்­மார் ராணு­வப் படைத் தள­பதி ஒரு­வ­ரை­யும் கிளர்ச்­சி­யா­ளர்­கள் பிடித்­து­வைத்­தி­ருப்­ப­தாக உள்­ளூர் தொலைக்­காட்சி செய்தி தெரிவித்தது.