பிலிப்பீன்சில் புயலின் கோரத் தாண்டவம்; 25 பேர் மரணம்

பிலிப்பீன்சில் புயலின் கோரத் தாண்டவம்; 25 பேர் மரணம்

1 mins read
9676033b-c625-4ecc-9824-bd6f6c1b9aa7
-

மணிலா: பிலிப்­பீன்சை 'மெகி' புயல் உலுக்­கி­ய­தில் குறைந்­தது 25 பேர் மாண்­ட­னர்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­துக்­குப் பிறகு இதுவே பிலிப்­பீன்சை இவ்­வாண்டு பதம் பார்த்­துள்ள புய­லா­கும்.

புயல் கார­ண­மாக வெள்­ள­மும் நிலச்­சரி­வு­களும் ஏற்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

பிலிப்­பீன்­சின் கிழக்கு மற்­றும் தெற்­குக் கட­லோ­ரப் பகு­தி­களில் வெள்­ளத்­தில் சிக்­கித் தவித்த மக்­களை மீட்­கும் பணி­யில் மீட்­புப் பணி­யா­ளர்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­ட­னர்.

நிலச்­ச­ரி­வின் கார­ண­மாக மண்­ணுக்கு அடி­யில் புதை­யுண்டு கிடக்­கும் பல­ரைக் காப்­பாற்ற அதி­கா­ரி­கள் விரைந்­துள்­ள­னர்.

மாண்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

கரை­பு­ரண்­டோ­டும் வெள்­ளத்­தி­லி­ருந்து தப்­பிக்க 1,300க்கும் அதி­க­மா­னோர் தாழ்­வான பகு­தி­க­ளி­லி­ருந்து மலை­கள் போன்ற உய­ர­மான இடங்­க­ளுக்­குச் சென்­றி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கன­மழை, பலத்த காற்று கார­ண­மாக மின்­சா­ரத் தடை ஏற்­பட்டு நிலை­மையை மேலும் மோச­மாக்­கி­யுள்­ளது.

பட­கு­கள் மூலம் கிரா­ம­வா­சி­களை மீட்­புப் படை­யி­னர் பத்­தி­ர­மாக வெளி­யேற்றும் படங்­களை பிலிப்­பீன்ஸ் அதி­கா­ரி­கள் இணை­யத்­தில் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

எதிர்பார்த்ததைவிட இந்தப் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக பிலிப்பீன்ஸ் வானிலை மையம் நேற்று கூறியது.

நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்ட கிராமவாசியை உயிருடன் மீட்ட பிலிப்பீன்ஸ் மீட்புப் பணியாளர்கள். படம்: ஏஎஃப்பி