விடிவுகாலத்துக்கு ஏங்கும் இலங்கை; உதவிக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பு

விடிவுகாலத்துக்கு ஏங்கும் இலங்கை; உதவிக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பு

2 mins read
cd39302b-7985-4204-843d-b6a4b7629cf1
தலைநகர் கொழும்பில் எரிபொருளுக்காக பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்த வாகன ஓட்டுநர்கள். படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் திண­றி­வ­ரும் இலங்கை, வெளி­நாட்­டுக் கடன் அடைப்­பைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ள­தாக அந்­நாட்­டின் மத்­திய வங்­கி­யின் தலை­வர் பி. நந்­த­லால் வீர­சிங்கே தெரி­வித்­துள்­ளார்.

எரி­பொருள் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை இறக்­கு­மதி செய்ய இலங்­கை­யி­டம் போது­மான பணம் இல்­லாத நிலை­யில் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

"கடன்­களை அடைப்­பது முடி­யாத காரி­ய­மா­கி­விட்­டது. கடன் செலுத்­தும் முறையை மாற்றி அமைத்து நாடு நொடித்­துப் போகும் அபா­யத்­தைத் தவிர்க்க வேண்­டும்," என்­றார் அவர். அனைத்­து­லக பண நிதி­யத்­தி­ட­மி­ருந்து கடன் வாங்க இலங்கை திட்­ட­மிட்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக கடந்த வாரம் பேச்­சு­வார்த்தை தொடங்கி இருக்­கிறது.

இதற்­கி­டையே தமி­ழர்­கள் கொண்­டா­டும் சித்­தி­ரைப் புத்­தாண்­டும் சிங்­க­ளப் புத்­தாண்­டும் நெருங்­கு­வ­தால் உணவு, மருந்து இல்­லா­மல் சிர­மப்­படும் இலங்கை நாட்­ட­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் 16,000 மெட்­ரிக் டன் அரி­சியை இந்­தியா கடந்த ஒரு வாரத்­தில் கப்­பல் மூலம் அனுப்­பி­வைத்­துள்­ளது. இது ஒரு­பு­றம் இருக்க இலங்­கைக்­குக் கடன் வழங்க சீனா உறுதி அளித்­தி­ருப்­ப­தாக சீனா­வுக்­கான இலங்­கைத் தூதர் பலிதா கொஹோனா கூறி­யுள்­ளார். சீனா­வி­ட­மி­ருந்து 2.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கடனை இலங்கை எதிர்­பார்க்­கிறது. வாங்­கிய கடன்­களை அடைக்­க­வும் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­க­வும் இந்­தத் தொகை தேவைப்­ப­டு­வ­தாக இலங்கை தெரி­வித்­தது. இதற்­கி­டையே, எரி­பொ­ருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக இலங்­கை­யில் வாகன ஓட்­டி­கள் தவித்து வரு­கின்­ற­னர்.

பெட்­ரோல் நிலை­யங்­க­ளுக்கு வெளியே நீண்ட வரி­சை­யில் பல மணி நேரத்­துக்கு வாக­னங்­கள் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லை­யில், உரி­மம் இல்­லா­மல் பெட்­ரோல், டீசல் விற்­ப­வர்­களை மடக்­கிப் பிடிக்க இலங்கை காவல்­

து­றை­யி­னர் தீவெங்­கும் அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­தி­னர். இதில் 68 பேர் கைது செய்­யப்­பட்டு அதிக அள­வி­லான எரி­பொ­ருள் பறி­மு­தல் செய்­யப்

பட்­டுள்­ளது.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­நி­லை­யால் ஒட்­டு­மொத்த இலங்கை நிலை­கு­லைந்­தி­ருக்­கும் வேளை­யில், மருந்து இல்­லா­மல் நோயா­ளி­கள் படும் வேத­னையை வார்த்­தை­க­ளால் வர்­ணிக்க முடி­யாது என்று இலங்கை மக்­கள் குமு­று­கின்­ற­னர்.

மருத்­து­வக் கட்­ட­மைப்பு முடங்­கி­விட்­ட­தால் பல அறுவை சிகிச்­சை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறை முன் இல்லாத அளவில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத அளவுக்கு இருப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.