நியூயார்க் ரயில் நிலையத் தாக்குதல்: சந்தேக நபர் அடையாளம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லின் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் தொடர்பில் சந்தேத்திற்குரிய ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான 62 வயது ஃபிராங்க் ஜேம்ஸை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஐவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

காயமடைந்தோரில் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் ஃபிராங்க் ஜேம்ஸ் அவர் பெரிய உடல் வாகைக் கொண்டவரென்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறையினரிடம் கூறியிருந்தனர்.

ஆரஞ்சு நிற சட்டை, முகக்கவசம், பச்சை நிற தலைக்கவசம், ஆகியவற்றை அணிந்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

சம்பவத்துடன் தொடர்பிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த வாகனத்தின் சாவியை சம்பவ இடத்தில் கண்டெடுத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!