லண்டன்: பிரிட்டனில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி தமது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக, அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்திஉள்ளாா்.
இதற்காக அவர் மீண்டும் மன்னிப்பு கோரியிருப்பினும் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதே விதிமீறலுக்காக போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை தாம் செலுத்திவிட்டதாக அவா் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.
போரிஸ் ஜான்சனுக்கும் அவரின் மனைவிக்கும் 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அது பிரிட்டனில் வாகன நிறுத்தக் கட்டணத்தைப் போன்றது என்றும் கூறப்படுகிறது.
இக்கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக்கிற்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
பிரிட்டனில் முடக்கநிலை உத்தரவு நடப்பில் இருந்தபோது அவற்றை மீறி, 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அந்நாட்டுப் போரிஸ் ஜான்சன் உட்பட பலர் கலந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு
உள்ளது.

