களநடுவர்மீது செல்சி நிர்வாகி அதிருப்தி

களநடுவர்மீது செல்சி நிர்வாகி அதிருப்தி

2 mins read
56d296ad-d7ec-4208-9ed5-6118f0c5a47c
-

மட்­ரிட்: சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­தாட்­டத்­தின் காலி­று­திப் போட்டி முடி­வுற்ற பிறகு கள­ந­டு­வர் ஒரு­வர் ரியால் மட்­ரிட் நிர்­வாகி கர்லோ அன்­டி­லோட்­டி­யு­டன் சேர்ந்து சிரித்­ததை செல்சி நிர்­வாகி டுக்கல் விமர்­சித்­துள்­ளார்.

பிற்­பாதி ஆட்­டத்­தின்­போது மார்­கோஸ் அலோன்சோ கையால் பந்­தைக் கையாண்­ட­தற்­காக, காணொளி உதவி நடு­வர் முறை­யின்­கீழ் அவ­ரது கோல் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இதில் நடு­வர் நேராக சென்று காணொ­ளிப் பதி­வைக் காணா­த­தற்­காக ஏற்­கெ­னவே டுக்கல் வருத்­தத்­தில் இருந்­த­போது, நடு­வர் சிரித்­தது அவரை மேலும் எரிச்­ச­லை­ய­டைய செய்­தி­ருக்கக் கூடும்.

"நடு­வ­ருக்கு நான் நன்றி சொல்ல சென்­ற­போது, எதி­ரணி நிர்­வா­கி­யு­டன் சேர்ந்து அவர் சத்­த­மாக சிரித்­துக் கொண்­டி­ருந்­தார்.

"ஒரு குழு கடைசி வரை போராடித் தோற்ற நேரத்­தில், செய்­யக்­கூ­டிய செயல் அல்ல அது.

"முதல் சுற்­றி­லும் இன்­றைய ஆட்­டத்­தி­லும் சில முடி­வு­கள் எங்­க­ளுக்கு எதி­ரா­ன­தாக அமைந்­து­விட்­டது," என்­றார்.

செல்­சி­யின் தோல்வி குறித்து பேசிய அவர், "நாங்­கள் அபா­ர­மாக விளை­யா­டி­னோம். எனவே, தோற்­றது குறித்து வருத்­தப்­பட ஒன்­றும் இல்லை," என்­றார்.

முதல் சுற்­றின் இரண்டு கோல்­கள் முன்­ன­லை­யு­டன் கள­மி­றங்­கிய மட்­ரிட்­டிற்கு எதி­ராக மள­ம­ள­வென மூன்று கோல்­கள் போட்டு முன்­னிலை பெற்­றது செல்சி.

அதன் பிறகு மட்­ரிட்­டின் ரோட்­ரிகோ ஒரு கோல் போட ஆட்­டம் 4-4 என்ற ஒட்­டு­மொத்த கோல்­க­ணக்­கில் சம­நிலை கண்­டது. ஆனால், கூடு­தல் நேரத்­தின்­போது மட்­ரிட்­டின் பென்­சிமோ அடுத்த கோலைப் போட்­டார். எனவே, 5-4 என்ற ஒட்­டு­மொத்த கோல் எண்­ணிக்­கை­யில் அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது ரியால் மட்­ரிட்.

மற்­றோர் ஆட்­டத்­தில், பயர்ன் மியூ­னிக், வில்லா ரியால் மோதின. இந்த ஆட்­டம் 1-1 என சம­நிலை கண்­டா­லும், 1-2 என்ற ஒட்­டு­மொத்த கோல்­க­ணக்­கில் மியூ­னிக்­கிற்கு அதிர்ச்சி அளித்து வில்லா ரியால் அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது.