நியூயார்க்: கொரோனா கிருமித் தொற்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில், உலகளவில் பதிவான கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அரை பில்லியனைக் கடந்தது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் ஏறத் தாழ 300 மில்லியனாக இருந்த பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, பிப்ரவரி மாதத்தில் 400 மில்லியனானது.
இம்மாதம் 12ஆம் தேதியன்று அந்த எண்ணிக்கை அரை பில்லியனைத் தாண்டியது.
ஆனால் 7.9 பில்லியன் உலக மக்கள் தொகையில், இதைவிட அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பல நாடுகளில் பரிசோதனை நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளது, வீட்டிலேயே பரிசோதனை செய்யப்படுவது போன்ற காரணங் களால் உண்மையான எண்ணிக்கையை அறிவது கடினம் என்றும் புதிய திரிபுகளைக் கண்டறிவது சிரமமாகிவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்ற செப்டம்பர் மாதம் வரை, ஆப்பிரிக்க மக்கள்தொகையில் 65% விழுக்காட்டினர் தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் பகுப்பாய்வு கணக்கிட்டுள்ளது.
இது, அங்கு பதிவான அதிகாரபூர்வ எண்ணிக்கையைவிட 100 மடங்கு அதிகமாகும்.
உலகளவில் அன்றாட தொற்றுச் சம்பவங்கள், கடந்த சில நாள்களாக குறைவாக பதிவாகி வருகின்றன. சென்ற வார சராசரி நாளொன்றுக்கு 1.1 மில்லியனாக இருந்தது.
இது, இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 32 விழுக்காடு குறைவாகும்.
இதற்கிடையே, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், இரண்டு புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுஉள்ளன.
இவை இரண்டும் ஓமிக்ரானின் துணை திரிபான பிஏ.2வில் இருந்து உருவானவை. அவை பிஏ.2வைவிட 25 விழுக்காடு வேகமாகப் பரவக்கூடியது. இதுவரை, இந்த திரிபால் தீவிர பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்ற
னர்.