தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவின் உதவியை பெற முயல்கிறது இலங்கை

2 mins read
e1996649-c64f-42e9-95d7-6b4235e14a4f
-

கொழும்பு: கடும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்கை, சீனா­வின் உத­வியை பெற முயல்­கிறது. ஆனால், இலங்­கைக்கு உதவி செய்­வ­தில் சீனா எச்­ச­ரிக்கை நிலையை கடைப்­பி­டிக்­கும் என்கின்றனர் நிபு­ணர்­கள்.

சீனா­வும் பொரு­ளா­தார வீழ்ச்­சியை எதிர்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில், கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிறகு 'பெல்ட் அன்ட் ரோட்' திட்டத்­திற்குச் செல­வி­டு­வ­தில் கவ­ன­மாக உள்­ளது.

மேலும், சீனா மற்ற நாடு­களுக்கு, கடன் கொடுத்து அவற்றைத் தன்னுடைய கடன் வலையில் சிக்­க­வைக்க பார்க்­கிறது என்ற குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­க­வும் விரும்­ப­வில்லை என்று கூறப்படு கிறது.

இலங்­கை­யின் நிதி­ய­மைச்­சர் அலி சாப்ரி புதன்­கி­ழ­மை­யன்று இலங்­கைக்­கான சீன தூதர் குயி ‌ஷென்­ஹாங்­கைச் சந்­தித்து, நாட்­டின் பொரு­ளா­தார நெருக்­கடி குறித்து பேசி­னார். அதன் பிறகு தூத­ர­கப் பக்­கத்­தில் டுவிட் செய்­தி­ருந்த குயி , சிர­ம­மான காலங்­களில், சீனா எப்­போ­தும் இலங்­கையை ஆத­ரிக்­கும் என்று பதி­விட்­டி­ருந்­தார்.

தற்­போ­துள்ள கட­னைத் திருப்­பிச் செலுத்த 1 பில்­லி­யன் டால­ரும் சீன பொருட்­களை வாங்­கு­வ­தற்கு 1.5 பில்­லி­யன் டாலர் கட­னும் சீனா­வி­டம் கேட்­டுள்­ளது இலங்கை.

இந்த உத­வி­கள் வழங்­கப்­ப­டுமா என்­பது குறித்து சீனா எது­வும் கூற­வில்லை.

இந்நிலையில், இலங்­கைக்கு உதவ சீனா தயக்­கம் காட்­டும் என்­கி­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கணே­சன் விக்­ன­ராஜா.

"இலங்­கைக்கு சீனா பணம் கொடுத்­தால், பெல்ட் அன்ட் ரோட் திட்­டத்­தில் சேர்ந்­துள்ள, இதே போன்ற நெருக்கடியில் உள்ள, மற்ற நாடு­களும் சீனா­வி­டம் கடன் கேட்கக்கூடும்," என்­கி­றார் அவர்.

ஆனால், வெளி­நாட்­டுக் கடன்­களைத் திருப்பி செலுத்­து­வ­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தும் இலங்­கை­யின் முடிவு, அனைத்­து­லக உத­வி­யின் ஒரு பகு­தி­யாக சீனா, இலங்கைக்கு உத­வு­வ­தற்­கான அழுத்­தத்தை அதி­க­ரிக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

1948ஆம் ஆண்டு அடைந்த சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.