வங்கியில் 2 மில்லியன் கொள்ளை

வங்கியில் 2 மில்லியன் கொள்ளை

1 mins read
50dd620a-2bf0-493e-a12a-8a4c200c2520
-

இஸ்­லா­மா­பாத்: ஆயு­தம் ஏந்­திய கொள்ளை கும்­பல் ஒன்று பாகிஸ்­தா­னின் கராச்சி நக­ரில் உள்ள வங்கி ஒன்­றில் பாகிஸ்­தான் ரூபாய் 2 மில்­லி­ய­னைக் கொள்­ளை­ய­டித்து சென்­று­விட்­ட­தாக அந்­நாட்டு காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

உள்­ளூர் நேரப்­படி காலை 11:09 மணி­ய­ள­வில் வங்­கிக்­குள் நுழைந்த ஆயு­தம் ஏந்­திய கொள்ளை கும்­பல், அங்கு பாது­காப்­புப் பணி­யில் இருந்த வங்கி காவ­லர்­களை­யும் வங்கி ஊழி­யர்­க­ளை­யும் தாக்கி துப்­பாக்கி முனை­யில் பிணைக் கைதி­க­ளாக பிடித்து வைத்­துக்­கொண்டு பணத்­தைக் கொள்­ளை­யடித்­த­னர்.

அத்­து­டன், வங்கிக் காவ­லர்­களின் ஆயு­தங்­க­ளை­யும் கொள்­ளை­யர்­கள் எடுத்­துச் சென்று விட்டனர்.

தக­வல் அறிந்து வங்­கிக்கு வந்த காவல்­து­றை­யி­னர் கொள்­ளைச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.