இஸ்மாயில் தேசிய முன்னணியின் தலைவராகும் நேரம் இது: அன்வார்

இஸ்மாயில் தேசிய முன்னணியின் தலைவராகும் நேரம் இது: அன்வார்

1 mins read
7dc86797-f40e-495b-9094-5e0ab4c15cfd
-

கோலா­லம்­பூர்: தேசிய முன்­னணி கட்­சி­யின் தலை­வ­ராக இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கான நேரம் வந்­து­விட்­ட­தாக அன்­வார் மூசா தெரி­வித்­துள்­ளார். அதோடு தேசிய முன்­ன­ணி­யின் தேர்­தல் இயக்­கு­ன­ரா­க­வும் இஸ்­மா­யில் சப்ரி நிய­மிக்­கப்­பட வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார். இது, பொதுத் தேர்­த­லுக்கு தேசிய முன்ன­ணியை தயார்­ப­டுத்­து­வதற்­கும் அதற்­கான செயல்­திட்­டத்தை வரை­வ­தற்­கும் சரி­யா­ன­தாக இருக்­கும் என்றார் அவர்.

முன்­ன­தாக, வரும் பொதுத்­தேர்­த­லி­லும் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பை, பிர­த­மர் வேட்­பா­ள­ராக அறிவிக்க அம்னோ ஒரு­ம­ன­தாக பரிந்துரைத்துள்ளது. அதே சமயம் பொதுத் தேர்தலுக்குப் பிறகே கட்சித் தேர்தல், நடத்தப்படும் என்றும் உறுதிபடுத்தப்பட்டது.