கடலில் சுற்றுச்சூழல் பேரிடர் ஏற்படும் அபாயம்

கடலில் சுற்றுச்சூழல் பேரிடர் ஏற்படும் அபாயம்

1 mins read
859beba3-b06c-4cce-a57a-e66e3ca6c4ca
-

துனிஸ்: எகிப்­தி­லி­ருந்து டீசல் எரி­பொ­ருள் ஏந்­திக்­கொண்டு மால்­டாவை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த கப்­ப­லுக்கு நடுக்­க­ட­லில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் கப்­ப­லி­லி­ருந்து டீசல் கசி­யும் அபா­யம் இருப்­ப­தாக அஞ்­சப்­ப­டு­கிறது.

கப்­ப­லில் இருக்­கும் பெரு­ம­ள­வி­லான டீசல் கட­லில் கசிந்­தால் மிக மோச­மான சுற்­று­ச்சூ­ழல் பேரி­டர் ஏற்­ப­டக்­கூ­டும் என்று அதி­காரி ­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

மோச­மான வானிலை கார­ண­மாக துனி­சிய கடற்­ப­கு­திக்­குள் நுழைய அக்­கப்­பல் நேற்று முன்­தினம் மாலை அனு­மதி கேட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

துனி­சி­யக் கடற்­க­ரை­யி­லி­ருந்து ஏறத்­தாழ 7 கிலோ­மீட்­டர் தூரத்­தில் இருந்­த­போது அக்­கப்­ப­லுக்­குள் கடல்­நீர் புகுந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கப்­பல் கட­லில் மூழ்­கும் அபா­யம் ஏற்­பட்­ட­தால் அதில் இருந்த ஏழு சிப்­பந்­தி­களையும் துனிசிய அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர். சுற்றுச்சூழல் பேரிடர் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.