ர‌ஷ்யா: மரியபோலைக் கைப்பற்றிவிட்டோம்

ர‌ஷ்யா: மரியபோலைக் கைப்பற்றிவிட்டோம்

1 mins read
b81219d2-e387-4b28-8ba8-eee976378801
-

கியவ்: உக்­ரே­னின் மரி­ய­போல் நகர் தங்­க­ளது கட்­டுப்­பாட்­டிற்­குள் வந்து­விட்­ட­தாக கூறும் ர‌ஷ்யா, அங்கு எஞ்­சி­யுள்ள உக்­ரேன் வீரர்­களை உட­ன­டி­யாக சர­ண­டை­யு­மாறு எச்­ச­ரித்­துள்­ளது.

ஆனால், ர‌ஷ்யா கெடு விதித்த கால நேரத்­திற்­குப் பிற­கும், எஃகு தொழிற்­சாலை ஒன்­றில் தஞ்­ச­ மடைந்­தி­ருந்த உக்­ரே­னிய வீரர்­கள் ர‌ஷ்­யா­வின் எச்­ச­ரிக்கைக்கு இணங்­கி­ய­தாக தெரி­ய­வில்லை.

"சர­ண­டை­யும் உக்­ரே­னிய வீரர்­களின் உயி­ருக்கு உத்­த­ர­வா­தம் உண்டு," என்று ர‌‌ஷ்ய தற்­காப்பு அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

கிட்­டத்­தட்ட ஆறு வார கால படை­யெ­டுப்­பில் மரி­ய­போ­லில் பேர­ழிவை ஏற்­ப­டுத்­திய ர‌ஷ்யா, அதனை முழு­மை­யாக தங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­து­விட்­ட­தாக கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் இணை­யத்­தள ஊட­கம் ஒன்­றி­டம் பேசிய உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்கி, "மரி­ய­போ­லில் நிலைமை மிக­வும் மோச­மாக உள்­ளது. எங்­க­ளது வீரர்­கள் தடுக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"காய­ம­டைந்த நிலை­யில், அவர்­கள் தங்­க­ளைக் காப்­பாற்றி கொள்ள போரா­டு­கி­றார்­கள். மரி­ய­போ­லில் மனி­தா­பி­மான நெருக்­கடி நில­வு­கிறது. அங்­குள்ள அனை­வ­ரை­யும் ர‌ஷ்யா வேண்­டு­மென்றே அழிக்­கப் பார்க்­கிறது," என்­றார்.

"மரி­ய­போ­லில் இருந்து எங்­கள் வீரர்­களை வெளி­யேற்­றி­னால், அது அமைதி பேச்­சு­வார்த்­தைக்கு முற்றுப் புள்­ளி­யாக அமைந்­து­வி­டும்," என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

ர‌ஷ்யாவின் அணுவாயுதத் தாக்குதலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இதற்­கி­டையே, கியவ்­வி­லும் ர‌ஷ்யப் படை­கள் தங்களது தாக்கு­தலை மீண்­டும் தொடங்­கி­யுள்­ளது.

அங்கு வெடி­ம­ருந்து தொழிற்­சாலை ஒன்றைத் தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக ர‌ஷ்யா தெரி­வித்­துள்­ளது.

மரி­ய­போ­லில் கிட்­டத்­தட்ட 4,000 உக்­ரே­னிய வீரர்­கள் மாண்­டு­விட்­ட­தாக ர‌ஷ்ய உள­வுப் படைத் தகவல்­கள் கூறு­கின்­றன.