ஷாங்காய்: சீன பொருளாதாரத்தில் பலத்த அடியை ஏற்படுத்திய ஷாங்காய் முடக்கநிலைக்கு மத்தியில், அங்குள்ள தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான திட்டங்களை சீனா வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஊழியர்கள் தொழிற்சாலைகளிலேயே தங்குவது, அவர்களுக்குத் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்வது போன்றவற்றுக்கு நிறுவனங்கள் திட்டமிட வேண்டும்.
அத்துடன் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு கொவிட்-19 கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஷாங்காய் பொருளாதார, தகவல் தொழில்நுட்ப ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வரும் புதன்கிழமைக்குள் தனிமைப்படுத்தல் பகுதிகளுக்கு வெளியே கிருமிப் பரவுவதைத் தடுக்க ஷாங்காய் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதுபற்றி நன்கு அறிந்தவர்கள் கூறினர்.
எனவே, கிருமித்தொற்றுப் பரிசோத னையை அதிகப்படுத்தி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
ஷாங்காயின் பல்வேறு பகுதிகளில் மூன்று வார காலமாக முடக்கப்பட்டு உள்ளன.

