புத்தாண்டை முன்னிட்டு 1,600 கைதிகள் விடுவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு 1,600 கைதிகள் விடுவிப்பு

1 mins read
7ddc25df-0c34-49ec-9716-f2ad1b69d261
சிறையில் இருந்து விடுவிக்கப்படும் தங்களின் அன்பானவர்களை வரவேற்க மியன்மார் சிறை வாயிலில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்தனர். படம்: ஏஎஃப்பி -

யங்கூன்: மியன்­மா­ரில் கொண்­டா­டப்­படும் பௌத்த புத்­தாண்டை முன்­னிட்டு 1,600 சிறைக் கைதி­களை அந்­நாட்­டின் ராணுவ ஆட்­சிக் குழு விடு­வித்­துள்­ளது.

ஆனால், அவர்­கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களா அல்­லது குற்­ற­வா­ளி­களா என்­பது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அதே சம­யம், அர­சி­யல் சிறைக் கைதி­கள் விடு­விக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்­பதை அறிந்து, அவர்­க­ளின் உற­வி­னர்­கள் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.

முன்­ன­தாக, 42 வெளி­நாட்­டி­னர் உட்­பட 1,619 கைதி­களுக்கு மன்­னிப்பு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­ப­டு­வார்­கள் என அரசு தொலைக்­காட்சி ஒன்­றில் அறி­விப்பு வெளி­யானது.

இதை­ய­டுத்து, தங்­க­ளின் அன்­பா­ன­வர்­களை மீண்­டும் சந்­திக்­கும் நம்­பிக்­கை­யு­டன் சிறை வாயி­லில் நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் காத்­தி­ருந்­த­னர்.

"அர­சி­யல் கைதி­கள், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை, குற்ற வழக்­கு­களில் தொடர்­பு­டை­ய­வர்­கள் மட்­டுமே விடு­விக்­கப்­பட்­டார்­கள்," எனச் சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர் சொன்­னார்.