ஷாங்காய்: கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் மூவர் மாண்டுவிட்டனர்.
சீனாவைத் தற்போது உலுக்கும் கொவிட்-19 அலையில் ஷாங்காயில் கிருமித்தொற்று காரணமாக முதல்முறையாக மரணம் ஏற்
பட்டுள்ளது.
நேற்று மாண்டவர்கள் 89 வயதுக்கும் 91 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் நடுப்பகுதியில் சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஜிலினில் கிருமித்தொற்று காரணமாக இருவர் மாண்டனர்.
சீனாவில் கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கொவிட்-19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கொவிட்-19 கிருமித்தொற்று அறவே இல்லாத நிலையை எட்ட சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதலில் அதன் முயற்சிகள் பலன் அளித்தன. ஆனால் டெல்டா, ஓமிக்ரான் கிருமி வகை பரவத் தொடங்கியதும் சீனாவுக்கு மிகக் கடுமையான சவால்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மாண்ட மூவரைப் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அதுதொடர்பான செய்திகள் வெளியே கசிந்ததாகக் கூறப்படுகிறது.
ஷாங்காயில் உள்ள இரண்டு மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் கிருமிப் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அதைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் படாதபாடு பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஷாங்காயில் தற்போது ஓமிக்ரான் கிருமி வகை மளமளவெனப் பரவி வருகிறது. பச்சிளங்
குழந்தையிலிருந்து மூத்தோர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

