எட்டு பேரின் உயிரைப் பறித்த விபத்து; ஓட்டுநருக்குப் பிணை

எட்டு பேரின் உயிரைப் பறித்த விபத்து; ஓட்டுநருக்குப் பிணை

1 mins read
e42f4286-08b6-4164-8f51-28db00adc81f
-

கோலா­லம்­பூர்: ஐந்து ஆண்­டு

­க­ளுக்­கு முன்பு மலே­சி­யா­வில் நிகழ்ந்த கோர விபத்­தில்

பதின்­ம­வ­ய­தி­னர் எட்டு பேர் மாண்­ட­னர்.

மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட மிதி

­வண்­டி­களில் சென்­று­கொண்­டி­ருந்த அந்­தச் சிறு­வர்­களை வாக­னம் ஒன்று மோதித் தள்­ளி­யது.

அந்த வாக­னத்தை ஓட்­டிய 27 வயது சேம் கி டிங்­கிற்கு ஆறு ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக அவர் சிறை­யில் இருந்­தார். தற்­போது அப்­பெண் 10,000 ரிங்­கிட் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

தீர்ப்­புக்கு எதி­ராக சேம் மேல்­மு­றை­யீடு செய்ய இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

விபத்­துக்கு சேம் கார­ண­மில்லை என்­றும் மிதி­வண்­டி­களை மாற்­றி­ய­மைத்து சாலை விதி­

மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடக்­கா­மல் சட்­ட­வி­ரோத மிதி­வண்­டிப் பந்­த­யத்­தில் அந்­தச் சிறு­வர்­கள் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது விபத்து ஏற்­பட்­ட­தா­க­வும் மலே­சி­யா­வில் பர­வ­லாக நம்­பப்­ப­டு­கிறது.

அச்­சி­று­வர்­க­ளின் மிதி­வண்­டி­களில் பிரேக், விளக்­கு­கள் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. 2017ஆம் ஆண்டு பிப்­ர­வரி 18ஆம் தேதி­யன்று அதிக வெளிச்­சம் இல்­லாத சாலை­யில் விபத்து நிகழ்ந்­தது. மாண்ட சிறு­வர்­கள் 13 வய­துக்­கும் 16 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.