சோல்: தென்கொரியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் நேற்று நீக்கப்பட்டன.
கடந்த இரண்டு மாதங்கள் இல்லாத அளவில் அன்றாடப் பாதிப்பு 50,000க்கும் குறைவாகப் பதிவாகி வருவதால் தென்கொரிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அடுத்த வாரத்திலிருந்து திரையரங்குகள், விளையாட்டரங்கங்கள் போன்ற உள்ளரங்குகளில் நொறுக்குத்தீனி சாப்பிட அனுமதி வழங்கப்படும். அதிகபட்சம் பத்து பேர் மட்டுமே ஒன்றுகூட முடியும் என்ற விதிமுறையும் கைவிடப்
படுகிறது.
உணவகங்களும் வர்த்தகங்களும் நள்ளிரவுக்குப் பிறகும் இயங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முகக்கவசத்தை பொதுமக்கள் தொடர்ந்து அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. வெளிப்புறங்களில் முகக்கவசம்அணியும் கட்டாயத்தை நீக்குவது தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும்.