ஆடவர் கொலை: பாகிஸ்தானில் அறுவருக்கு மரண தண்டனை

ஆடவர் கொலை: பாகிஸ்தானில் அறுவருக்கு மரண தண்டனை

1 mins read
af0a0ce9-c85e-45a0-a7c1-b6d0199e7f7f
-

இஸ்­லா­மா­பாத்: இலங்­கை­யைச் சேர்ந்த பிரி­யந்த குமாரா எனும் ஆடவர், பாகிஸ்­தா­னில் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் 6 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

48 வயது பிரி­யந்த குமாரா பாகிஸ்­தா­னின் சியால்­கோட்­டில் உள்ள தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் மேலா­ள­ராக பணி­யாற்றி வந்­தார். இவர் மத நிந்­தனை செய்­த­தாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்­ப­லால் அடித்­துக் கொலை செய்­யப்­பட்டு எரிக்­கப்­பட்­டார்.

இச்சம்­ப­வம் பாகிஸ்­தா­னில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது மட்­டு­மின்றி, இலங்­கை­யு­ட­னான உற­வி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அப்­போ­தைய பிர­த­மர் இம்­ரான் கான் இச்­சம்­ப­வத்தை 'அவ­மா­ன­க­ர­மான நாள்' என்று குறிப்­பிட்டு இருந்­தார்.

இந்த சம்­ப­வம் தொடர்­பாக பாகிஸ்­தான் தீவி­ர­வாத தடுப்பு நீதி­மன்­றத்­தில் வழக்கு விசா­ரணை நடந்து வந்­தது.

குற்­றம்­சாட்­ட­பட்ட 88 பேரில் ஒன்­பது பேருக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஒரு­வர் குற்­ற­மற்­ற­வர் என விடு­விக்­கப்­பட்­டார். மற்­ற­வர்­க­ளுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.