கோலாலம்பூர்: மலேசியாவில் சில வர்த்தகங்கள் கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் இழந்த வருவாயை மீட்டெடுக்க கிருமிப் பரவல் விதிமுறைகளை மீறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வர்த்தகங்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு மட்டும் வழங்கப்படவேண்டிய சேவைகளை அளிக்கின்றன.
உணவகங்கள் உள்ளிட்ட சில வர்த்தகங்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. சில நிறுவனங்கள் மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரையும் வேலைக்கு எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் வாரந்தோறும் 10,000க்கும் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.