'நெரிசல் காரணமாக கலவரம் மூண்டிருக்கலாம்'

2 mins read
c30c6220-0e47-4130-90df-4f6619c71733
-

அலோர் ஸ்டார்: மலே­சி­யா­வின் பினாங்கு மாநி­லத்­தில் உள்ள குடி­நு­ழைவு தடுப்­புக் காவல் நிலை­யம் நெரிசலாக இருந்ததால் அங்கு கல­வ­ரம் மூண்­டி­ருக்­க­லாம் என்று அந்­நாட்­டுக் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது. அந்­தக் கல­வ­ரத்­தால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நூற்றுக்­க­ணக்­கான ரொஹிங்யா மக்­கள் தப்­பியோடினர்.

சுங்கை பக்­காப் தற்­கா­லி­கத் தடுப்­புக் காவல் நிலை­யத்­தில் அச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. அதற்­குப் பின்­னால் உள்ள சரி­யான கார­ணத்தை அறிய காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­வ­தாக கெடா மாநில காவல்­துறை அதி­காரி வான் ஹசான் அக­மது கூறி­யுள்­ளார்.

குற்­ற­வி­யல் சட்­டப் பிரி­வு­கள் 147, 224 ஆகி­ய­வற்­றுக்­குக்­கீழ் இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அவர் சொன்­னார். கைது செய்­வதற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­களுக்கு எதிர்ப்பு தெரி­விப்­பது, கல­வ­ரத்­தில் ஈடு­ப­டு­வது ஆகிய செயல்­களை அந்த இரு பிரி­வு­களும் குறிக்­கின்­றன.

சுங்கை பக்காப் காவல் நிலை­யம் பினாங்கு, கெடா மாநி­லங்­களுக்கு இடையே உள்ள எல்­லைப் பகு­திக்கு அருகே அமைந்­துள்­ளது. அங்கு மூண்ட கல­வ­ரத்­தால் சுமார் 528 ரொஹிங்யா மக்­கள் நேற்று முன்­தி­னம் காலையில் தப்­பி­ ஓடினர்.

அவர்­களில் விரை­வுச் சாலை­யைக் கடக்க முயன்ற ஆறு பேர் கொல்­லப்­பட்­ட­னர். அவர்­களில் இரு­வர் ஆண்­கள், இரு­வர் பெண்­கள், ஒரு­வர் சிறு­வன், மற்­றொ­ரு­வர் சிறுமி.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி தப்பி­யோ­டிய 357 பேரைக் காவல்­துறையி­னர் கைது­செய்­துள்ளனர். கல­வ­ரம் மூண்­ட­போது 23 குடி­நுழைவுப் பிரிவு அதி­கா­ரி­கள் தடுப்­புக் காவல் நிலை­யத்­தில் இருந்­த­தாக திரு வான் ஹசான் தெரி­வித்­தார்.

அவர்­களில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­னார்.

சிறிய இடத்­தில் பலர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தால் நிலை­மை­யைக் கட்­டுப்­ப­டுத்­த­மு­டி­யா­மல் போன­தா­க­வும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­கள் அதைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­க­வும் திரு வான் ஹசான் குறிப்­பிட்­டார்.

இன்­னும் பிடி­ப­டா­தோ­ரைக் கண்டு­பி­டிக்க பினாங்கு காவல்­து­றை­யு­டன் இணைந்து தாங்­கள் தேடல் நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­போவதா­க­வும் அவர் சொன்­னார்.