ஹாங்காங்: கிருமிப் பரவல் தொடங்கிய ஈராண்டுகளில் முதல்முறையாக, வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிக்க ஹாங்காங் முடிவு செய்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்த ஹாங்காங், அவற்றைத் தளர்த்தத் தொடங்கிஉள்ளது.
அங்கு அன்றாட தொற்று சம்பவங்கள் தற்போது 1,000த்திற்கும் குறைவாக பதிவாகின்றன.
வெளிநாட்டுப் பயணிகள், உள்ளூர்வாசிகளுக்கான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்ற 1ஆம் தேதி முதல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அனுமதி அளித்தது. ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14லிருந்து 7 நாள்களாக குறைக்கப்பட்டது.
விமானங்களில் வரும் அனுமதிக்கப்படும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த விமான நிறுவனம், ஹாங்காங்கிற்கு குறிப்பிட்ட நாள்களுக்கு சேவையைத் தொடர முடியாது. இதற்கிடையே, 4 மாதங்களுக்குப் பிறகு, உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.

