ஷாங்காய்: ஷாங்காயில் மட்டும் நேற்று கிருமித்தொற்றுக்கு 11 பேர் மாண்டனர். அங்கு இத்தனை பேர் மாண்டது இதுவே முதல் முறை.
இதைத்தொடர்ந்து முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த அதன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, நேற்று முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது.
ஆனால், ஏற்கெனவே நடப்பில் உள்ள முடக்கநிலை கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டு, மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கிருமிப் பரவல் மோசமாக உள்ளதால், கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் அவசியம் என்று ஷாங்காய் அரசாங்கம் கூறியது.
நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நோய்த்தொற்றின் அபாயத்தைப் பொறுத்து கூடுதல் சோதனைகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.