தனிமையை இனிமையாக்கிய ஆடவர்: 100 மீட்டர் நடைபாதையில் 170 கி.மீ. ஓடினார்

தனிமையை இனிமையாக்கிய ஆடவர்: 100 மீட்டர் நடைபாதையில் 170 கி.மீ. ஓடினார்

1 mins read
4741546e-3c2d-4d10-8689-65c5701ada00
-

‌ஷாங்­காய்: சீனா­வில் 15 நாள்­க­ளாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த ஆட­வர் ஒரு­வர், அந்த மையத்­தின்

100 மீட்­டர் நீள­முள்ள நடை­பா­தை­யில், கிட்­டத்­தட்ட 170 கிலோ மீட்­டர் ஓடி­யுள்­ளார்.

சமூக ஊழி­ய­ரான லியு என்ற அந்த ஆட­வ­ருக்கு மார்ச் 28ஆம் தேதி தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

கடும் வேலை­யால் மன­த­ள­வி­லும் உடல் அள­வி­லும் மிகுந்த சேர்­வுற்­றி­ருந்த அவருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­து சற்று நிம்மதி அளித்தது.

பிறகு தனி­மைப்­ப­டுத்­தல் மையத்­திற்கு அனுப்­பப்­பட்ட அவர், முதல் நாளன்று 10 கி.மீ. ஓடி­னார்.

மையத்­தில் இருந்த நாள்­களில், அவர் அதி­க­பட்­ச­மாக ஒரு நாளில் 21 கி.மீ. ஓடி­யுள்­ளார். இது கிட்­டத்­தட்ட பாதி நெட்­டோட்ட தூரத்­திற்கு சமம்.

தொற்­றுக்கு ஆளா­னால் கிடைக்கும் உண்மையான அனு­ப­வத்தையும் மக்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளும் நோக்­கத்­தில், தனி­மைப்­ப­டுத்­தல் மையத்­தில் நடந்த வி‌ஷ­யங்­களைச் சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்த அவர், தமது ஓட்­டத்தை­ப் பற்­றி­யும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

2019ல் நடந்த மாரத்­தான் எனும் நெட்­டோட்­டத்­தில் 40 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 48 நிமி­டங்­களில் முடித்­துள்­ளார்.