கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம் வாக்குவாதம்

கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம் வாக்குவாதம்

1 mins read
eb8a1eb6-e68c-463d-81d9-df81a3b41e91
-

மும்பை: காற்பந்துப் போட்டிகளில் நடப்பதைப் போல், ஐபி­எல் கிரிக்­கெட் போட்டியிலும் வீரர்கள் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்­தான், டெல்லி அணி­கள் மோதிய இப்போட்டியில், இரண்­டா­வ­தாக பந்­த­டித்­துக் கொண்­டி­ருந்த டெல்லி அணி­யின் வெற்­றிக்கு 6 பந்­து­களில் 36 ஓட்­டங்­கள் தேவை­ப்பட்­டது. அப்­போது ஒபட் மெக்­காய் வீசிய முதல் 3 பந்­து­களி­லும் சிக்சர் அடித்­தார் ரோவ்­மன் பவல்.

3வது பந்து பந்­த­டிப்­பா­ள­ரின் இடுப்­புக்­குச் சற்று மேலே வீசப்­பட்­ட­தால், டெல்லி அணி நடு­வர்­களி­டம் 'நோ பால்' கேட்­டது.

ஆனால் நடு­வர்­கள் 'நோ பால்' வழங்க மறுத்­து­விட்­டார்­கள். 3வது நடு­வ­ரி­டம் இது­கு­றித்து விசா­ரிக்­க­வும் இல்லை.

இத­னால் எரிச்­சல் அடைந்த ரிஷப் பந்த், களத்­தில் இருந்த பவல், குல்­தீப் யாதவை உட­ன­டி­யாக வெளி­யே­றச் சொன்­னார். பிறகு உத­விப் பயிற்­சி­யா­ளர் பிர­வீன் ஆம்­ரேவை மைதா­னத்­துக்கு உள்ளே அனுப்­பி­னார். அவர் உள்ளே வந்து நடு­வர்­க­ளி­டம் விவா­தம் செய்­தார். ஆனால் நடு­வர்­கள் ஆம்­ரேவை உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­றச் சொன்­னார்­கள்.

எல்­லைக்­கோட்­டுக்கு அருகே இருந்த பட்­லர் இது­பற்றி ரிஷப் பந்­தி­டம் கார­சா­ர­மாக விவா­தம் செய்­தார்.

இத­னால் ஆட்­டத்­தில் பெரிய பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. பிர­வீன் ஆம்ரே திரும்­பி­ய­வு­டன் வழக்­கம் போல் ஆட்­டம் நடந்­தது. கடைசி 3 பந்து­களில் 2 ஓட்­டங்­கள் மட்­டும் எடுத்து, கடை­சிப் பந்­தில் 36 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் பவல்.

இந்த ஆட்­டத்தை, ராஜஸ்­தான் அணி 15 ஓட்­டங்­கள் வித்­தி­யாசத்­தில் வென்­றது.