தோக்கியோ: ஜப்பானில் சனிக்கிழமையன்று விபத்துக்குள்ளான படகில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 10 பேர் மாண்டுவிட்டதாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஏழு பேர் ஆண்கள், மூவர் பெண்கள் என்று கடலோர காவல்படைக் கூறியது.
இந்தச் சுற்றுலா படகில் 2 குழந்தைகள் உட்பட 24 பயணிகள்,
2 ஊழியர்கள் இருந்தனர்.
ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது படகு
டனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உடனடியாக, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டாலும் மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கடலோர காவல் படையினர் 8 குழுக்களாக அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் நீர்நிலைகளில் பனிக்கட்டிகள் காணப்படும் என்றும் இம்மாதிரியான தண்ணீரில் ஒரு சில நிமிடங்களில் எல்லாம் மாறிவிடும் என்றும் உள்ளூர் மீன்பிடி கூட்டுறவு அதிகாரி ஒருவர் சொன்னார்.

