முடக்கநிலைக்குத் தயாராகும் பெய்ஜிங்

முடக்கநிலைக்குத் தயாராகும் பெய்ஜிங்

1 mins read
617c84dd-447c-4e1c-b5f2-53a8ca774ebe
பெய்ஜிங்கில் ஒட்டுமொத்த பரிசோதனைக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மக்கள் உணவுப் பொருள்களை வாங்க கடைகளில் குவிந்தனர். படம்: ஏஎஃப்பி -

பெய்­ஜிங்: பெய்­ஜிங்­கில் கிரு­மிப் பர­வல் தலை­தூக்­கி­யுள்­ள­தை­ய­டுத்து, அங்கு ஒட்­டு­மொத்த பரி­சோ­தனை முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

இது, ‌ஷாங்­காய் போன்று முடக்­க­நி­லைக்கு ஆளாக வேண்­டி­யி­ருக்­குமோ என்ற அச்­சத்தை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனவே, உணவு, உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­கிக் குவிக்­கத் தொடங்­கி­விட்­ட­னர் பெய்­ஜிங் மக்­கள்.

"மோச­மான ஒரு சூழ்­நி­லையை எதிர்­கொள்ள தயா­ராகி வரு­கி­றேன்," என்­றார் தமக்­குத் தேவை­யான உண­வுப் பொருள்­களை இணை­யத்­தில் வாங்­கிய ஸாங் எனும் மாண­வர்.

கடை­க­ளி­லும் மக்­கள் முண்­டி­யடித்­துக்­கொண்டு பொருள்­களை வாங்­கு­கின்­ற­னர்.

சில பேரங்­கா­டி­கள் வழக்­கத்­தை­விட இரண்டு மடங்கு பொருள்­களை நிரப்­பி­ய­தாக கூறின.

இணைய நிறு­வ­னங்­களும் பொருள்­களை வாடிக்­கை­யா­ளர்­களி­டம் கொண்டு சேர்க்க மேலும் பலரை வேலை­யில் சேர்த்­துள்­ளது.

பெய்­ஜிங்­கில் கடந்த ஒரு வார கால­மா­கவே கிரு­மி தீவி­ர­மாக பரவி வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கிட்­டத்­தட்ட 3.45 மில்­லி­யன் பேர் வசிக்­கும் சாவ்­யாங் நக­ரத்­தில் உள்­ள­வர்­க­ளுக்கு இந்த வாரத்­தில் மூன்று முறை கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை செய்­ய­வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்துடன், பொது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மக்கள் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­யில் இருந்து பெய்­ஜிங்­கில் 47 உள்­ளூர் கிரு­மிப் பர­வல் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்­றில் பாதிக்­கும் மேற்­பட்­டவை சாவ்­யாங் நக­ரத்­தில் பதி­வா­னவை.

இதற்கிடையே, ‌ஷாங்காயில் முடக்கநிலையை குறிப்பிட்ட, குறுகிய வட்டத்திற்குள், கொண்டு வர தயாராகி வருவதாக அந்நகர அதிகாரிகள் கூறினர்.

‌ஷாங்காயில் நேற்று ஆக அதிகமாக 51 பேர் தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். முந்திய நாள் இது 39ஆக இருந்தது.