ஜப்பான் சுற்றுலாப் படகு விபத்து குறித்த விசாரணை தொடங்கியது

ஜப்பான் சுற்றுலாப் படகு விபத்து குறித்த விசாரணை தொடங்கியது

1 mins read
2e1aabde-5ba2-4cf5-a5d8-f75993311002
-

தோக்­கியோ: ஜப்­பான் சுற்­று­லாப் படகு விபத்­தில் காணா­மல் போனவர்­க­ளைத் தேடும் பணி தீவிரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அத்துடன் அது காணா­மல் போன­தற்­கான கார­ணத்தை ஆராயும் விசாரணையையும் தொடங்­கி­யது.

சம்­பவ இடத்திற்குச் சென்ற போக்­கு­வ­ரத்து அமைச்­சர் டெட்­சுவோ சைட்டோ, என்ன நடந்­தது என்­ப­தைக் கண்­ட­றி­யவும் அது மீண்­டும் நிக­ழா­மல் தடுப்­பதற்­கும் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­படும் என்­றார்.

சனிக்­கி­ழ­மை­யன்று அந்த நீர்ப்­ப­கு­தி­யில் அலை­கள் அதி­க­மாக இருந்ததால், மீன்­பிடி பட­கு­கள் விரை­வாக துறை­மு­கத்­திற்குத் திரும்­பி­ய­தா­க­வும் உள்­ளூர் ஊட­கங்­கள் கூறின.

இதற்­கி­டையே, விபத்­தில் சிக்­கிய குழந்­தை­யும் மாண்­டு­விட்­டது. எனவே மாண்­ட­வர்­களின் எண்­ணிக்கை 11ஆக உயர்ந்­துள்­ளது. கஜு 1 என்ற அந்­தச் சுற்­ற­லாப் பட­கின் எந்த பாகங்­களும் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், மிதக்க உத­வும் ஆரஞ்சு நிறச் சாத­னங்­கள்­ க­டற்கரை­யோ­ரத்­தில் கண்டறியப்பட்டன.