3,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கிய எரிமலை

3,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கிய எரிமலை

1 mins read
44766c78-57cc-4024-a353-ee4e5d733f45
அனக் கரகடோவா எரிமலை கடைசியாக 2018ஆம் ஆண்டு வெடித்ததில் 429 பேர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் கர­க­டோவா எரி­மலை வெடித்­தது. இத­னால் விண்ணை நோக்கி 3,000 மீட்­டர் உய­ரத்­திற்கு அது சாம்­ப­லைக் கக்­கி­யது.

அனாக் கர­க­டோவா அதா­வது 'கர­க­டோ­வா­வின் குட்டி' எரி­ம­லை­யா­னது ஜாவா, சுமத்ரா தீவு­களைப் பிரிக்­கும் நீரி­ணை­க்கு அருகில் சாம்­ப­லைக் கக்­கி­யது.

இத­னை­ய­டுத்து, அப்­ப­கு­திக்கு அரு­கில் வசிப்­ப­வர்­கள் முகக்­கவசம் அணிந்து கொள்­ளுமாறு அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்து உள்­ள­னர்.

கடந்த சில வாரங்­களில் அனக் கர­க­வோடா எரி­மலை 21 முறை குமு­றி­யது என்­றா­லும் நேற்­று­தான் பெரிய அள­வில் குமு­றி­ய­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். எரி­மலை தொடர்ந்து குமு­றிக் கொண்­டி­ருப்ப தாக­வும் அவர்­கள் கூறி­னர்.

எனவே, அப்­ப­கு­தி­களில் விடுக் கப்­பட்ட எச்­ச­ரிக்கை, இரண்­டா­வது நிலை­யில் இருந்து மூன்­றா­வது நிலைக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எரி­ம­லை­யைச் சுற்றி ஐந்து கிலோ மீட்­டர் சுற்­ற­ள­வுக்கு மக்­கள் செல்­ல­வேண்­டாம் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

1883ஆம் ஆண்­டில் கர­க­டோவா எரி­மலை வெடித்­த­போது, ஏறத்­தாழ 35,000 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

அதன் பிறகு உருவான அனாக் கரகடோவா, கடைசியாக 2018ஆம் ஆண்டு வெடித்ததில் 429 பேர் மாண்டனர்.