ஒவ்வொரு நாளும் பேரிடர் நிலை: ஐநா எச்சரிக்கை

ஒவ்வொரு நாளும் பேரிடர் நிலை: ஐநா எச்சரிக்கை

1 mins read
04b14e87-3a9e-4fba-9120-87a4a76d2d8c
-

கோலா­லம்­பூர்: பரு­வ­நிலை மாற்­றத்­தின் கார­ண­மாக வரும் 2030க்குள், ஆண்­டிற்கு 560 பேரி­டர்­கள் அதா­வது நாளொன்­றுக்கு ஒன்­றுக்­கும் மேற்­பட்ட பேரிடரை உலகம் எதிர்­கொள்ளக்கூடும் என ஐநா எச்சரித்து உள்ளது.

கடந்த 20 ஆண்­டு­களில், மித­மா­னது, மிக மோச­மா­னது என ஆண்­டொன்­றுக்­குக் கிட்­டத்­தட்ட 350 முதல் 500 பேரி­டர்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் ஐநா கூறி­யுள்­ளது.

பேரி­டர்­க­ளால் மாண்­டோர் அல்­லது பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கடந்த ஐந்­தாண்­டு­களில் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அது சொன்­னது.

மனி­தர்­கள் தங்­க­ளைத் தாங்­களே அழி­வின் சுழ­லில் சிக்க வைத்­துக்­கொண்­டுள்­ள­தா­க­வும் பரு­வ­நிலை மாற்­றத்­தால் ஏற்­படும் ஆபத்­தைப் புறக்­க­ணித்­தும் பல மில்­லி­யன்­ கணக்­கான மக்­களை வறு­மை­யில் வாடும் நிலைக்­குத் தள்­ளு­வ­தா­க­வும் அது சொன்­னது.

பரு­வ­நிலை மாற்­றம், மக்களின் வாழ்­வா­தா­ரங்­களில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்தை அர­சாங்­கங்­களும் குறைத்து மதிப்­பி­டு­வ­தா­க­வும் அது சொன்­னது. பல நாடு­களில் பேரி­டர்­க­ளால் ஏற்­பட்ட பாதிப்­பு­களில் இருந்து மீள முடி­யா­மல் ஆண்­டுக் கணக்­கில் மக்­கள் தவிப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.