பரிசோதனையை விரிவுபடுத்தியது பெய்ஜிங்

பரிசோதனையை விரிவுபடுத்தியது பெய்ஜிங்

1 mins read
3e06b501-09f7-4884-979f-a4657df12215
பெய்ஜிங்கில் இவ்வார இறுதிக்குள் கிட்டத்தட்ட 20 மில்லியன் பேரைப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: ‌சீனா­வின் ‌ஷாங்­கா­யில் ஒரு மாத கால­மாக நீடிப்­பது போன்ற முடக்­க­நி­லை­யைத் தவிர்க்க விரும்­பும் அதி­கா­ரி­கள், பெய்­ஜிங்­கில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து பெய்­ஜிங்­கின் 22 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யில் முக்­கால்­வாசி பேர் கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்­காக வரி­சை­யில் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

ஏப்­ரல் 25ஆம் தேதி பெய்­ஜிங்­கில் 33 பேருக்­குப் புதி­தாக கிருமி தொற்­றி­யது. முந்­திய நாள் இது 19ஆக இருந்­தது.

இந்­நி­லை­யில், பெய்­ஜிங்­கின் சாவ்­யாங் மாவட்­டத்­தில் மட்­டும் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த பரி­சோ­தனை, தற்­போது மேலும் 10 மாவட்­டங்­க­ளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்­படி இவ்­வார இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 20 மில்­லி­யன் பேர் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். மேலும் 16 மில்­லி­யன் பேருக்கு செவ்­வாய்க்­கி­ழமை பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. மற்ற பகு­தி­க­ளைக் காட்­டி­லும் பெய்­ஜிங்­கில் கட்­டுப்­பா­டு­கள் வலு­வாக உள்­ள­தால், இங்கு ‌ஷாங்­காய் போன்­ற­தொரு நிலை ஏற்­ப­டாது," என்று பரி­சோ­த­னைக்­காக காத்­துக் கொண்­டி­ருந்த ஒரு­வர் சொன்­னார்.

‌ஷாங்­கா­யைப் போல் தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்ட ஒரு மாதத்­திற்­குப் பிறகு அல்­லா­மல், ஒரு சில நாள்­க­ளி­லேயே பெய்­ஜிங்­கில் அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தால், கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்டு விடும் என்று அம்மாநில மக்­கள் கரு­துகின்றனர்.

‌ஷாங்காயில் நேற்று 52 பேர் மாண்டுவிட்டனர். ஏப்ரல் 17ஆம் தேதிக்குப் பிறகு அங்கு மாண் டோரின் ஒட்டுமொத்த எண் ணிக்கை 190ஆக உள்ளது.