தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலன் மாஸ்க்கிடம் கைமாறுகிறது டுவிட்டர்

2 mins read
7607cca7-c070-4dec-b621-ccb9866d599a
-

நியூ­யார்க்: உல­கின் முன்­னணி கோடீஸ்­வ­ர­ரும் டெஸ்டா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிறு­வ­ன­ரு­மான எலன் மாஸ்க், சமூக ஊட­க­மான டுவிட்­ட­ரின் ஒட்­டு­மொத்த பங்­கு­க­ளை­யும் 44 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்கு (60.5 பில்லியன் வெள்ளி) வாங்க ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

இத­னை­ய­டுத்து, டுவிட்­ட­ரின் ஒவ்­வொரு பங்­கிற்­கும் 54.20 அமெ­ரிக்க டாலர் வழங்­கப்­படும் என்று நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

டுவிட்­ட­ரின் பங்கு விற்­பனை நிறுத்­தப்­பட்ட ஏப்­ரல் 1ஆம் தேதி­யன்று இருந்த விலை­யை­விட 38% அதி­க­மா­கும். டுவிட்­ட­ரின் குறிப்­பி­டத்­தக்க அளவு பங்­கு­கள் தம் வசம் உள்­ளதை மாஸ்க் அறி­வித்­த­வு­டன், டுவிட்­டர் பங்கு விற்­பனை நிறுத்­தப்­பட்­டது.

டுவிட்­ட­ரில் 83 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­களால் பின்­தொ­ட­ரப் படும் எலன் மாஸ்க், ஜன­வரி மாதத்­தில் டுவிட்­ட­ரின் 9 விழுக்­காட்டு பங்­கு­களை வாங்­கி­னார்.

மார்ச் மாதத்­தில் டுவிட்­ட­ரின் கொள்­கை­க­ளைப் பகி­ரங்­க­மாக விமர்­சிக்­கத் தொடங்­கிய அவர், அது ஒரு தலைபட்சமாக உள்­ளது என்­றும் தானி­யக்க முறை­யில் தேவை­யற்­ற வி‌ஷயங்கள் காட்­டப்­படு­வ­தா­க­வும் சொன்­னார்.

இந்­நி­லை­யில், டுவிட்­ட­ரின் நிர்­வா­கக் குழு­வில் இணை­வ­தற்கு விடுக்­கப்­பட்ட அழைப்பை நிரா­க­ரித்த அவர், அதன் மொத்த பங்­கு­க­ளை­யும் வாங்க விரும்­பு­வ­தா­கச் சொன்­னார்.

அதன் பிறகு, நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளைத் தொடர்ந்து தற்­போது டுவிட்­டர் மாஸ்க் வச­மா­னது.

இது­கு­றித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள மஸ்க், "எனது மோச­மான விமர்­ச­கர்­கள்­கூட டுவிட்­ட­ரில் இருப்­பார்­கள் என்று நம்­பு­கி­றேன். ஏனெ­னில் அது­தான் பேச்சு சுதந்­தி­ரம். புதிய அம்­சங்­க­ளு­டன் டுவிட்­டரை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம், அதை முன்­பை­விட, சிறந்­த­தாக ஆக்க விரும்­பு­கி­றேன்," என்று பதி­விட்­டுள்­ளார்.

16 ஆண்­டு­கால டுவிட்­டரை எலன் மாஸ்க் வாங்­கி­யது, அவர் உறுதி அளித்­தது போல், இணைய பேச்சு சுதந்­தி­ரத்­தில் முக்­கிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, டுவிட்­டர் தளத்­தில் வெறுப்­புப் பேச்­சைக் கட்­டுப்­படுத்­தும் நோக்­கில் மேற்­கொள்­ளப்­பட்ட கொள்­கை­கள், வழி­மு­றை­கள் இனி என்ன ஆகும் என்­பது தங்­க­ளுக்­குக் கவலை அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது அம்­னஸ்டி இன்­டர்­நே­ஷ­னல்.