தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: மாணவர்கள் அனைவரும் மே 1 முதல் பள்ளி திரும்ப உத்தரவு

2 mins read
59a9f3e1-a8f1-4218-b4c4-ce6976ff263b
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் வரும் மே மாதம் 1ஆம் தேதி­யில் இருந்து மாண­வர்­கள் அனை­வ­ரும் கட்­டா­யம் பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்­குத் திரும்ப வேண்­டும் என்று அந்­நாட்­டின் கல்வி அமைச்­சர் டாக்­டர் ரட்ஸி ஜிதின் தெரி­வித்­துள்­ளார்.

மலே­சி­யா­வில் மே 1ஆம் தேதி முதல் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வதை ஒட்டி, இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் போட்­டி­ரா­வி­டி­னும் நேரடி கற்­பித்­தலுக்கு ஏது­வாக ஆசி­ரி­யர்­களும் பள்­ளிக்கு வர­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 பர­வ­லுக்கு முன்பு இ­ருந்­த­தைப் போன்ற வரு­கைப்­பதிவு முறை மீண்­டும் தொடங்­கும் என்று டாக்­டர் ரட்ஸி தெரி­வித்­தார்.

மாண­வர்­கள் பள்­ளிக்கு வர­வில்லை எனில் பெற்­றோர்­கள் அதற்­கான விளக்­கக் கடி­தத்­தை வழங்க வேண்­டும் என்­று அவர் சொன்னார்.

"முடிந்த அள­விற்­குக் கல்­வித்­து­றையை முழு­மை­யா­கத் திறப்­போம். அதே வேளை­யில், மாண­வர்­க­ளின் பாது­காப்­பும் உறு­தி­செய்­யப்­படும்," என்று பள்­ளி­க­ளுக்­கான புதிய நிலை­யான வழி­காட்டு நெறி­மு­றை­களை நேற்று அறி­வித்­த­போது அமைச்­சர் ரிட்ஸி கூறி­னார்.

பள்­ளிக்கு மாண­வர்­கள் சீருடை அணிந்­து­செல்­ல­வும் அவர் ஊக்­கு­வித்­துள்­ளார்.

"ஜூன் 12ஆம் தேதி­யில் இருந்து சீருடை அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­படும்," என்­றார் அவர்.

வகுப்­ப­றை­களில் பாது­காப்பு இடை­வெளி விதி­முறை அகற்­றப்­ப­ட­வுள்­ளது. ஆனா­லும், வகுப்­பில் மாண­வர்­கள் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­பதை ஆசி­ரி­யர்­கள் உறு­திப்­படுத்த வேண்­டும்.

உட்­பு­றங்­களில் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்ற நிலை­யில், வெளிப்­பு­றங்­க­ளி­லும் அப்­ப­ழக்­கத்­தைக் கடைப்­பி­டிக்­கு­மாறு டாக்­டர் ரிட்ஸி ஊக்­கு­விக்­கி­றார்.

இருப்­பி­னும், வகுப்­பில் பாடம் நடத்­தும்­போது ஆசி­ரி­யர்­கள் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­ இல்லை என்­பது உட்­பட சில விதி­வி­லக்­கு­களும் நடப்­பில் இருக்­கும் என்று அவர் சொன்­னார்.

300,000 இந்தோனீசியர்கள் மலேசியா திரும்பக்கூடும்

இத­னி­டையே, நோன்­புப் பெரு­நாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு ஏறத்­தாழ 300,000 இந்­தோ­னீ­சி­யர்­கள் மலே­சியா திரும்­பு­வர் என்று அந்­நாட்­டிற்­கான இந்­தோ­னீ­சி­யத் தூதர் ஹெர்­மோனோ தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக கடந்த ஈராண்­டு­களில் அதி­க­மான இந்­தோ­னீ­சி­யர்­கள் மலே­சி­யா­வி­ல் இ­ருந்து வெளி­யேறி, தாய்­நாடு திரும்­பி­னர்.

இந்­நி­லை­யில், "மலே­சி­யா­வில் ஆட்­பற்­றாக்­குறை நில­வு­வ­தால் நோன்­புப் பெரு­நாள் முடிந்த பிறகு கிட்­டத்­தட்ட 300,000 பேர் மலே­சியா திரும்­பு­வர் என எதிர்­பார்க்­கி­றோம். ஆயி­னும், இந்­தோ­னீ­சி­யர்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக மலே­சி­யா­விற்­குள் நுழைய முயல வேண்­டாம்," என்று திரு ஹெர்­மோனோ அறி­வு­றுத்தி இருக்­கி­றார்.