மெய்நிகர் ஒலிம்பிக் போட்டி: சிங்கப்பூர் நடத்தக்கூடும்

மெய்நிகர் ஒலிம்பிக் போட்டி: சிங்கப்பூர் நடத்தக்கூடும்

1 mins read
d005274b-c8ec-46af-822f-ee80ac393b23
-

அடுத்த ஆண்­டில் முத­லா­வது மெய்­நி­கர் ஒலிம்­பிக் விளை­யாட்டுத் திரு­வி­ழாவை நடத்­தும் சாத்­தி­யம் குறித்து சிங்­கப்­பூர் ஆராய்ந்து வரு­கிறது.

சுவிஸ்­ஸோட்­ட­லில் நேற்று நண்­ப­கல் விருந்­தின்­போது அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றத்­தின் தலை­வர் தாமஸ் பேக் இத­னைத் தெரி­வித்­தார்.

ஒரு­நாள் பய­ண­மா­கச் சிங்­கப்­பூ­ருக்கு நேற்று வந்­தி­ருந்த திரு பேக், "முத­லா­வது ஒலிம்­பிக் மெய்­நி­கர் விளை­யாட்­டுத் திரு­வி­ழா­வைச் சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தி­னால் நாங்­கள் மிக­வும் மகிழ்ச்­சி அடை­வோம்," என்­றார்.

முன்­ன­தாக, கடந்த 2010ஆம் ஆண்­டில் முத­லா­வது இளை­யர் ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்டி­களைச் சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தி ­இருந்­தது.

அத­னைச் சுட்டிப் பேசிய திரு பேக், "இளை­யர் ஒலிம்­பிக் போட்டி­க­ளுக்கு முன்­னோ­டி­யா­கத் திகழ்ந்­த­து­போல ஒலிம்­பிக் மெய்­நி­கர் விளை­யாட்­டுத் திரு­வி­ழா­விற்­கும் சிங்­கப்­பூர் முன்­னோ­டி­யாக விளங்க முடி­யும்," என்றார்.

கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், சிங்­கப்­பூர் தேசிய ஒலிம்­பிக் மன்­றத்தின் தலை­வர் டான் சுவான் ஜின் உள்­ளிட்­டோர் இந்த நண்­பகல் விருந்து நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர். அப்­போது, ஒலிம்­பிக் இயக்­கத்­திற்­குச் சிங்­கப்­பூ­ரின் பங்­க­ளிப்­பைச் சிறப்­பிக்­கும் வித­மாக அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றத் தலை­வர் கிண்­ணத்தை திரு பேக், திரு டானி­டம் வழங்­கி­னார்.