மேடான்: இந்தோனீசியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பெண்கள் மரணமடைந்தனர்.
இந்த விபத்தில் மாண்ட பெண்கள் 30 முதல் 55 வயதுடையவர்கள். வடக்கு சுமத்ராவில் உள்ள அந்த சுரங்கத்திற்கு அருகில் இருந்த குன்று ஒன்று சரிந்ததில் இரண்டு மீட்டர் ஆழ சேற்றில் சிக்கிய பெண்கள் மாண்டுவிட்டனர். நிலச்சரிவில் சிக்காமல் தப்பிய இரண்டு பெண்கள், கிராம அதிகாரிகளிடம் இச்சம்பவத்தைக் கூறினார்கள்.

